சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி அகற்றம்

2 months ago 10

திருச்செங்கோடு, நவ.22: திருச்செங்கோடு-பரமத்தி சாலையில், திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தளந்தூர் வரை 9 கி.மீ., சாலை, முதலமைச்சரின் சாலை விரிவாக்கத் திட்டத்தில் ₹59.15 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பணிக்கு சாலையோரம் உள்ள புளிய மரங்கள், மின்கம்பங்கள் குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். சாலை விரிவாக்கத்திற்காக அகற்ற வேண்டிய மரங்கள் குறித்து வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், அகற்ற வேண்டிய மரங்கள் குறித்த தகவலை, மாவட்ட பசுமை குழுவிற்கு அனுப்பி, அனுமதி பெற்றனர். இதையடுத்து, சாலை விரிவாக்க பணிக்காக கரட்டுப்பாளையம் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

The post சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article