சாலை விபத்தில் தொழிலாளி பலி

2 months ago 15

நாமக்கல், டிச.17: நாமக்கல் அருகே பொட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(45). இவர் பொம்மைகுட்டைமேட்டில் உள்ள ஒரு முட்டை விற்பனை கம்பெனியில், தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியது. இதில், படுகாயமடைந்த முருகேசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நல்லிபாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சாலை விபத்தில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Read Entire Article