சாலை சீரமைப்பு பணி தீவிரம்

4 months ago 15

தொண்டி, டிச.20:தொண்டி பேரூராட்சியில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சாலைகள் தோண்டப்பட்டு குடிதண்ணீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் ரோடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குழாய் பதிக்கும் பணி ஒரளவு முடிவடைந்த நிலையில், ரோடுகள் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலி கான் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்.

The post சாலை சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article