சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி; டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

2 months ago 12

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடந்த அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

Read Entire Article