சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று இயங்குகிறது. இங்கு பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் வெளி மாநிலத்தினர். இவர்கள் ஆலை வளாகத்திலேயே தங்கி பணியாற்றுகின்றனர்.