சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: தமிழக சட்டப் பேரவையில் காரசார விவாதம்

1 month ago 7

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான இன்று (மார்ச் 20) நடைபெற்ற விவாதத்தின்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், “இந்த நாடு, சாதி, மதங்கள் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சாதி அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதனடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கிறோம். வன்னியர் சமூகத்துக்கு உரிய பங்கை பிரித்து கொடுக்க வேண்டும்.

Read Entire Article