கும்பகோணம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாடு தாராசுரத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக் குழுத் தலைவர் ம.க.ஸ்டாலின் வரவேற்றார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வாழ்த்துரையாற்றினார்.