சல்மான்கானின் 'சிக்கந்தர்' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

6 months ago 20

மும்பை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.

மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் துவங்கியுள்ளது. அதாவது மும்பையில் உள்ள ரெயில் நிலையம் போன்ற ஒரு பிரமாண்டமான செட்டில் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதி வரை மும்பையில் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read Entire Article