
திண்டிவனம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது . இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின் போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப்பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்ட லங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகி களுடன் நேற்றும் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இைதயடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்றும் வெளியானது. அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட் டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் ( தென் சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16-ந் தேதி முதல் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். அதன்படி இன்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவர் ராமதாஸை அன்புமணி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸை சந்தித்து சமாதானம் செய்ய உள்ள அன்புமணி திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.