கரூர், பிப். 11: கரூர் மாவட்ட சலவை தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கலைஞர் கைவினைத் திட்டம் மூலமாக சலவை தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது.
இந்தாண்டுக்கான துணி தேய்ப்பதற்கான கூலியை உயர்த்துவது, அடுத்தமாதம் மார்ச்சில் நடைபெற இருக்கும் மாநில நிர்வாகிகள் தேர்வில் அதிகளவில் கலந்து கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.