சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டம்

6 hours ago 3

தூத்துக்குடி : சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் மையத்தை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்கொரியாவின் எச்டி ஹூண்டாய் நிறுவனம், கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பெரிய அளவிலான கப்பல்களை உருவாக்கவும் கப்பல் பழுது நீக்கும் மையத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடத்தை ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதாகவும் தூத்துக்குடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக தூத்துக்குடியில் சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article