சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

6 months ago 20

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஸ்பிரே பாய்ன்ட் பகுதியில், ₹6 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 8 கிலோ எடையுள்ள சந்தன மரம் இருந்தது. இதை நேற்று காலை, மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆலை பாதுகாப்பு அலுவலர் ஜெய்சங்கர், ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article