சம்பா சாகுபடி: தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய அன்புமணி வலியுறுத்தல்

2 months ago 10

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உரங்கள் தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article