சபரிமலை கோயில் அருகே பூந்தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கின

3 months ago 7

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்திருக்கும் நாட்களில் தினமும் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு டன் கணக்கில் மலர்கள் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா உள்பட மாநிலங்களில் இருந்து தான் இந்த மலர்கள் சபரிமலைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இதற்கு பெரும் செலவு ஆவதால் சபரிமலையிலேயே பூந்தோட்டம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கோயில் அருகே சன்னிதானம் பகுதியில் உள்ள காலி இடங்களில் பூந்தோட்டம் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் செடிகளை நட்டு இதைத் தொடங்கி வைத்தார்.

 

The post சபரிமலை கோயில் அருகே பூந்தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கின appeared first on Dinakaran.

Read Entire Article