சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

1 day ago 3

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நட்க்கிறது.

விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். வருகிற 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறும். அன்று பக்தர்களுக்கு விஷு கை நீட்டமாக, நாணயங்களை தந்திரி மற்றும் மேல் சாந்தி ஆசியோர் வழங்குவார்கள். 

Read Entire Article