சந்தைக்கு வரத்து குறைவால் பச்சை மொச்சை விலை உச்சம்

2 weeks ago 3

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு, அய்யன்கோட்டை, நெல்லூர், தேவரப்பன்பட்டி, சித்தையன்கோட்டை, சிங்காரக்கோட்டை, நல்லாம்பிள்ளை, தாண்டிக்குடி மலை அடிவார கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது.

இப்பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை காரணமாக விவசாய பணிகள் தொடங்கப்பட்டது. இதில் மானாவாரி பயிர்களான சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களையும், ஊடுபயிராக மொச்சை, தட்டாங்காய் போன்ற பயிர்களையும் நட்டனர்.

இந்நிலையில் கடந்தாண்டு மொச்சைக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தாலும், அதிக பாராமரிப்பு செலவு காரணமாக பெரும்பாலான விவசாயிகள் மொச்சை பயிர்களை நடவு செய்யவில்லை.

குறைவான பரப்பளவிலேயே மொச்சை பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இதனால் விளைச்சல் குறைந்துள்ளதால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சந்தையில் பச்சை மொச்சை விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘இப்பகுதியில் விளையும் பச்சைமொச்சை நல்ல சுவையுடன், வாசனை மிகுந்தது. ஜனவரி மாதம் மட்டுமே விளைச்சல் இருக்கும். வரத்து குறைவு மற்றும் குறைந்த பரப்பளவில் நடவு செய்யப்பட்டதால் பச்சை மொச்சை விலை சதமடித்துள்ளது’’ என்றனர்.

The post சந்தைக்கு வரத்து குறைவால் பச்சை மொச்சை விலை உச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article