சந்தன மரம் வெட்டி விற்ற 2 பேர் கைது

4 months ago 11

அரூர், பிப்.10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்த 2 பேரை கைது செய்த வனத்துறையினர் ₹50 ஆயிரம் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, ஜமனஹள்ளி பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னசாமி (57), தனசேகர் (45). இவர்கள் கோபாலபுரம் சர்க்கரை ஆலை வளாகத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டி இருப்பு வைத்து, பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்தனர்.

இதனை அறிந்த மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், வனவர்கள் விவேகானந்தன், சாக்கப்பன் மற்றும் வனக்காப்பாளர்கள் பெரியசாமி, ரமேஷ், சுரேஷ் ஆகியோர் சின்னசாமி மற்றும் தனசேகரை கைது செய்து, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், உதவி வனப்பாதுகாவலர் சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தி, இருவருக்கும் தலா ₹25 ஆயிரம் வீதம் ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தலைமறைவான கிருஷ்ணனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

The post சந்தன மரம் வெட்டி விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article