திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமித்ஷா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான்.