சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதி கோரி அமளி: பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்

3 days ago 2

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக சட்டம் - ஒழுங்கு தொடர்பாக பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று (மார்ச் 28) கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 28) கேள்வி நேரம் முடிந்த பிறகு, துணை முதல்வர் உதயநிதி தனது துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்து பதிலுரையை தொடங்கினார். அப்போது, நேரமில்லா நேரத்தில் தமிழக சட்டம் - ஒழுங்கு தொடர்பாக பேச எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அனுமதி கோரினார்.

Read Entire Article