சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் விதி எண் 110ன்கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். இதனை தொடர்ந்து, ஒன்றிய, மாநில அரசு உறவு தொடர்பாக ஆராய குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில சுயாட்சியால் நாட்டின் வலிமை குறையும். மாநிலத்துக்கு முழு அதிகாரம் தர முடியாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
The post சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.