
டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச இபிஎஸ் முயற்சித்தபோது அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரத்தை பேரவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். இதனையடுத்து அதிமுகவினர் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.