சங்கரன்கோவில் அருகே லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப பலி

1 day ago 2

சங்கரன்கோவில்,ஏப்.18: சங்கரன்கோவில் அருகே லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பலியானார். சங்கரன்கோவில் காந்திநகர் மூன்றாவது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி வள்ளி (65). இந்நிலையில் நேற்று மாலை மூதாட்டி வள்ளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நெல்லை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லை டவுனை சேர்ந்த பண்டாரம் மகன் நாராயணன் (50) என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்கரன்கோவில் அருகே லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article