
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்ட வண்னம் உள்ளனர்.
இந்நிலையில், சித்திரை முதல் நாளையொட்டி கோவை மாவட்டம் காட்டூர் அம்பால் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரூ. 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகள் வைத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.