சென்னை: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாமல் தடைபட்ட உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூச மற்றும் சித்திரை தேர் திருவிழாக்களை இனி ஆண்டுதோறும் தடையின்றி நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து கோயில்கள் பாதுகாப்பு இயக்க கோவை மாவட்ட பொதுச் செயலாளரான முத்துகணேசன் தாக்கல் செய்திருந்த மனுவில், “கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சிவன் கோயில். கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயிலில் தைப்பூசம் மற்றும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வுகள் விமரிசையாக நடத்தப்பட்டு வந்துள்ளது.