குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கோவூர் ஊராட்சியில் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, குன்றத்தூர் அடுத்த கோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நியாயவிலை கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார். அப்போது, அவரை வரவேற்ற அதிகாரிகள் கூடையில் பூக்களுக்கு பதிலாக, பானையில் இருந்து பொங்கல் பொங்குவது போன்றும், கரும்பை கூடையில் வைத்து பரிசாக கொடுத்தும் வரவேற்றனர். பின்னர், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
The post கோவூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.