கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2 months ago 9

கோவில்பட்டி, டிச. 17: கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது இங்குள்ள சின்னமாரி என்பவரது வீட்டில் 55 மூட்டைகளில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

The post கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article