கோவில்பட்டி பள்ளியில் சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி

2 months ago 13

கோவில்பட்டி, நவ.16: கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு சட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தினர். இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சட்ட வழிகாட்டுதல் ஆலோசனை, மாணவ மாணவிகள் பாதுகாப்பு, சமூக பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமையாசிரியர்கள் அருணாசலம், முத்துகுமார், முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், சட்ட கல்லூரி பேராசிரியர் பௌமினா, மெர்லின் ஸ்டீபன், மாணவர்கள் கமலேஷ், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டி பள்ளியில் சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article