கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

3 days ago 2

சிவகங்கை, மார்ச் 29: ேகாயில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே கோயில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ள, 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article