கோயம்பேட்டில் வெவ்வேறு இடங்களில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை - விற்பனை மந்தம் என தகவல்

4 months ago 25

சென்னை: சென்னை கோயம்பேட்டில் வெவ்வேறு இடங்களில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்பட்டதால் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை ஆகிய விழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான பூஜை பொருட்களை மலிவு விலையில் ஒரே இடத்தில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. அதேநேரம், அதிகளவில் மக்கள் கூடுவதால் நெரிசல் ஏற்பட்டு கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிரமமும் ஏற்பட்டது.

Read Entire Article