கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை: 3 வாரங்களுக்கு குறைய வாய்ப்பில்லை

7 months ago 39

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து சில்லறை விற்பனை சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.90-க்கும், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.67-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி உற்பத்தியில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் முறையாக 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. தமிழகத்தின் தக்காளி தேவையை இவ்விரு மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. கர்நாடக மாநிலம் சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் பலமனேரி, மதனப்பள்ளி, புங்கனூர், ஆகிய இடங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகிறது.

Read Entire Article