கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு

6 months ago 21

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, இன்று அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென இருமடங்காக உயர்ந்துள்ளது. நாளை (16ம் தேதி) கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.900லிருந்து ரூ.1,200க்கும், ஐஸ் மல்லி ரூ.800லிருந்து ரூ.1000க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600லிருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.1,200லிருந்து ரூ.1,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அரளிப்பூ ரூ.200லிருந்து ரூ.250க்கும், சாமந்தி ரூ.140லிருந்து ரூ.150க்கும், சம்பங்கி ரூ.120லிருந்து ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100லிருந்து ரூ.120க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.150 க்கும் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், நாளை (16ம் தேதி) கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, இன்று அனைத்து பூக்களின் விலையும் 2 மடங்காக உயர்ந்துள்ளது. எனினும், அனைத்து பூக்களின் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. நாளையும் இதே விலை நீடிக்கும். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article