கோயம்பேடு பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை பிடிக்க போலீஸ் தீவிரம்

2 months ago 11

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் 14வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 9 மாத கர்ப்பமாக இருந்தார். இதுசம்பந்தமாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த கருண் (19) என்பவர்தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கருணை தேடியபோது தலைமறைவாகிவிட்டார். இதனால் கருணை கைது செய்வதற்கு தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post கோயம்பேடு பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை பிடிக்க போலீஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article