கோமியம் கிடைக்க வாய்ப்பில்லை… கூடுதல் ஆய்வுக்கும் வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி

22 hours ago 5

சென்னை: கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” என கீழடியின் வரலாறு குறித்து ‘அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுதுதான் அங்கீகரிக்க முடியும்’ என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்த நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.

கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

“அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார்.

கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” என தெரிவித்துள்ளார்.

The post கோமியம் கிடைக்க வாய்ப்பில்லை… கூடுதல் ஆய்வுக்கும் வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article