மதுரை : கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். திட்டமிடல் அலுவலர், உதவி இயக்குநர், திட்ட மேம்பாட்டு அலுவலர் பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அடையாளம் கண்டு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி மனு appeared first on Dinakaran.