
மும்பை,
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கிய பியாண்ட்23 கிரிக்கெட் உரையாடல் ஒன்றில் பும்ரா கலந்துகொண்டு தனது கிரிக்கெட் பயணம் தொடர்பான பல்வேறு விஷயங்களை பும்ரா பகிர்ந்தார். அதில் குறிப்பாக, "நீங்கள் ஏன் விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடுவதில்லை? என மைக்கேல் க்ளார்க் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பும்ரா கூறியதாவது;
"நான் (தொலைக்காட்சியில்) அனைத்து பந்து வீச்சாளர்களும் வார்த்தைகளாலும் பந்தாலும் பேட்ஸ்மேன்களை மிரட்டுவதைப் பார்த்திருக்கிறேன். நான் விளையாடத் தொடங்கியபோது அதைப் பின்பற்ற முயற்சித்தேன். ஆனால் அது எனக்கு வேலை செய்யவில்லை. எனக்கு ஆக்ரோஷமான குணம் இருக்கிறது ஆனால் நான் அதைச் செய்ய முயற்சித்தபோது நான் நன்றாக பந்து வீசவில்லை.
எனவே இது எனக்கு முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழி அல்ல என்பதை உணர்ந்தேன். எனவே நான் எனது ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன். எனக்கு உதவும் வகையில் அதை இயக்க முயற்சித்தேன். அதை எனக்கு சாதகமாகப் பயன்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்"
நான் வெற்றி பெற விளையாடுகிறேனே தவிர ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல. அதேபோல், எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் எல்லையை கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்துகொள்ளவோ விரும்பவில்லை." என்று பும்ரா கூறினார்.