கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருந்து பழநியில் சுவாமி தரிசனம்

1 week ago 5

பழநி: கோடை விடுமுறையின் காரணமாக பழநி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் தரிசனத்திற்கு சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கோடை விடுமுறையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம் மற்றும் கோயில் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டது.பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்தும் காவடி எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தது. பக்தர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதி மற்றும் மலைக்கோயில் வெளிப்பிரகாரங்களில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் பழநி கோயிலின் சுற்றுலா பேருந்து நிலையம், பூங்கா சாலை, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருந்து பழநியில் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article