கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு

2 weeks ago 5

சென்னை,

தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் 21 ஆம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்றது. மேலும் 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்.9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மதியம் தேர்வு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16-ஆம் தேதி (திங்கள் கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read Entire Article