கோடை விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

13 hours ago 5

சென்னை,

பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர். ரெயில் மற்றும் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஆம்னி பஸ்களில் ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

அதே போன்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மேற்கண்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர ரூ.500 முதல் ரூ.700 வரை கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதை இணையதளத்தில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற திடீர் கட்டண உயர்வை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read Entire Article