குன்னூர்,பிப்.25: குன்னுார் காட்டேரி பூங்காவில் கோடை சீசனுக்காக அலங்கார செடிகள் நடவு செய்யும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம், குன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவை சுற்றி பசுமை நிறைந்த தேயிலை தோட்டம்,மலைகள்,நீர்வீழ்ச்சி,ரன்னிமேடு ரயில் நிலையம் போன்றவை உள்ளது. இந்த இயற்கை சூழல் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நடக்கவுள்ள நிலையில்,மார்ச் முதல் வாரத்தில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. இதற்கிடையே முன்னதாக, பூங்காவில், ‘ஐரிஸ் குளோரோபைட், பொன்னாங்கண்ணி,டேபிள் ரோஸ் உள்ளிட்ட அலங்கார செடி நாற்றுகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த அலங்கார செடிகளை கொண்டு, புதிதாக பல்வேறு வடிவமைப்புகளை ஏற்படுத்த தோட்டக்கலை துறையினர் முடிவு செய்துள்ளனர்.
The post கோடை சீசனுக்காக குன்னூர் காட்டேரி பூங்காவில் அலங்கார செடிகள் நடவு பணி துவக்கம் appeared first on Dinakaran.