கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பான இடங்களுக்கு உடனே மாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

2 months ago 8

சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று துறை உயர் அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ‘‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லினை புகாருக்கு இடமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

தினசரி வானிலை அறிக்கையினை விழிப்புடன் கேட்டறிந்து, கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பான இடங்களுக்கு உடனுக்குடன் நகர்வு செய்ய வேண்டும்’’ என்றார்.கூட்டத்தில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் பழனிசாமி, நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பான இடங்களுக்கு உடனே மாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article