சென்னை: கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் வசிக்கும் ஜி.சரளா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த 1999-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறேன். என்னைப்போல 100 பேர் இப்பகுதியில் வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர்.