கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள்

7 months ago 42

திண்டுக்கல்: கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் சிரமத்திறகுள்ளாகினர்.

Read Entire Article