கொடைக்கானலில் நெரிசலை தவிர்க்க விரைவில் மாற்றுப்பாதை திட்டம்: அமைச்சர் தகவல்

3 hours ago 3

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அர.சக்கரபாணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானல் நகரில் இருந்து வில்பட்டி, கோவில்பட்டி, புலியூர் வழியாக பெருமாள் மலை அருகே பழநி சாலையை சென்றடையும் வகையில் இந்த சாலை அமையவுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏவான செந்தில்குமார் எதிர்க்கட்சியாக இருந்த போதிருந்து குரல் கொடுத்து வருகிறார். சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். இதையடுத்து முதலமைச்சர் இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முதற்கட்ட ஆய்வுக்கு வந்துள்ளோம். மாற்றுப்பாதை அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை அமையவுள்ள சாலை, வனப்பகுதியில் இல்லை என்பதால் விரைவில் இந்த திட்டம் முடிய வாய்ப்புள்ளது.

Read Entire Article