தேவதானப்பட்டி: கொடைக்கானலில் இருந்து கேரளாவிற்கு சென்ற சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 45 பேர் கேரளாவை சுற்றிப் பார்க்க பஸ்சில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். சுற்றுலா பஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் பஸ் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் பகுதியில் வரும்போது சாலையில் உள்ள சென்டர்மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ் டிரைவரான ஆண்டிபட்டியை சேர்ந்த மாரிமுத்து(49), ஆறுமுகம்(43), எட்வின்(42), அகஸ்டின்(45), தேவி(41), வேளாங்கன்னி(40), கார்த்திகா(43), ரோஸி(42) உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பெரியகுளம் மற்றும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post கொடைக்கானலில் இருந்து கேரளா சென்ற சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: 13 பேர் படுகாயம் appeared first on Dinakaran.