கோவை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 27ம் தேதி ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனிடம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இவரிடம் நடத்திய விசாரணை மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள சயானுக்கு கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரை நாளை (17ம் தேதி) காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
The post கொடநாடு வழக்கு: சயான் நாளை ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.