சென்னை: மாநிலங்களி்ன் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்பில் அவர் பேசியதாவது: நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதை பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன.