கொடநாடு வழக்கு: கனகராஜ் உறவினருக்கு சம்மன்

1 day ago 3

கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். இதைத்தொடர்ந்து, கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது, அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள கனகராஜின் உறவினர் ரமேஷிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அவருக்கு வரும் 22ம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

The post கொடநாடு வழக்கு: கனகராஜ் உறவினருக்கு சம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article