கைதிகளை மட்டுமின்றி போலீஸையும் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்ய பணிக்கக் கூடாது: ஐகோர்ட்

3 months ago 13

சென்னை: சிறை கைதிகளை மட்டுமின்றி, ஆர்டர்லியாக காவல் துறையினரையும் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய பணிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி தனது வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று, பின்னர் நகை, பணத்தை திருடியதாக அவரை தாக்கி சித்ரவதை செய்ததாக அவரது தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read Entire Article