கைதான பீகார் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

4 hours ago 4

 

சேலம், ஜூன் 26: சேலம் ஜாகீர்அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெருவில் வசித்து வந்தவர் பீகாரை சேர்ந்த சந்தோஷ்(32). இவர் கடந்த மாதம் 11ம்தேதி அம்மாபாளையத்தில் மளிகை கடை நடத்தி வந்த வயதான தம்பதிகளான பாஸ்கரன்(65) அவரது மனைவி வித்யா(60) ஆகியோரை சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்தார். அவர்கள் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், சந்தோசை கைது செய்ததுடன், நகையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இவர் செய்த இரட்டை கொலையால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோன்மணி, துணை கமிஷனர் சிவராமன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபுவுக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர், சந்தோசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சேலம் சிறையில் உள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

The post கைதான பீகார் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article