கேரள கடல் பகுதியில் எல்சா-3 கப்பல் கவிழ்ந்து விபத்து: தமிழக பகுதிகளில் பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு

1 day ago 4

சென்னை: கேரள கடற்கரையில் கப்பல் கவிழ்ந்துள்ள நியைலில், பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களும் மீனவர்களும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த மே 24-ம் தேதி கேரள மாநில கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா-3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் மூழ்கின.

Read Entire Article